Wednesday, 15 August 2018

மறுக்கப்படும் ஹதீஸ்களும் அழகான விளக்கமும்

மறுக்கப்படும் ஹதீஸ்களும் அழகான விளக்கமும் 


பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம்

நாம் இதுவரை சில சஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரன்படுகிறது என்று மறுத்து வந்தோம், அப்படி நாம் இதுவரை மறுத்த வந்த ஹதீஸ்களில் சில ஹதீஸ்களை எந்த வித முரனும் இல்லாமல் விளங்க முடிகிறது அதனால் அது எந்த விதத்திலும் முரன்படவில்லை என்பதை தான் ஒவ்வொரு பதிவாக பார்க்கவிருக்கிறோம் 

இழகுவாக புரிந்துக்கொள்ள முதலில் சின்ன சின்ன ஹதீஸ்களை அனுகுவோம் அதைத்தொடர்ந்து மற்ற சம்பவங்களுக்கு போகலாம் 

முதலாவதாக கருஞ்சீரக ஹதீஸ் 

அந்த ஹதீஸை படித்து விட்டு மேலும் தொடருவோம் 

5688. அபூ ஹுரைரா(ரலி) கூறினார் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கருஞ்சீரக விதையில் 'சாமைத்' தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது' என்று கூறினார்கள். 
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்: 
'சாம்' என்றால் 'மரணம்' என்று பொருள். 'அல்ஹப்பத்துஸ் ஸவ்தா' என்றால், (பாரசீகத்தில்) 'ஷூனீஸ்' (கருஞ்சீரகம்) என்று பொருள். 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்

இந்த ஹதீஸ் நடைமுறை படுத்த முடியாது 
நிரூபிக்கப்பட்ட உன்மைக்கு எதிராக இருக்கிறது என்று சொல்லி மறுக்கப்படுகிறது 

முதலாவதாக முஸ்லிம்களாகிய நாம் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும் 

மருத்துவத்தை பொருத்தவரை ஒருவருக்கு மருந்து கொடுக்கப்பட்டு அங்கே அந்த மருந்து பலனின்றி அவர் மரணித்து விட்டால் இங்கே நாம் எடுக்க வேண்டியது அல்லாஹ்வுடைய நாட்டம் தான் எப்படிப்பட்ட மருத்துவம் கொடுக்கப்பட்டாலும் அங்கே அல்லாஹ் விரும்பினால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என்பதை தான் முன் நிருத்த வேண்டும் 

அதே போல எப்படிப்பட்ட மருத்துவம் கொடுக்கப்போவதாக இருந்தாலும் அது உன்மையில் அந்த நோய்க்கான மருந்தாக இருந்தாலும் அங்கே குணமாக வேண்டும் என்று நோக்கம் இருந்தாலும் அல்லாஹ்வுடைய நாட்டத்தையே முன் நிருத்த வேண்டும் 

இது தான் ஒரு முஸ்லிமுடைய பன்பாக இருக்க வேண்டும் இதற்க்கான ஆதாரத்தை பின்னர் தொடர்ச்சியாக பதிவு செய்வேன் 

அதே போல கருஞ்சீரக ஹதீஸை பொருத்தவரை சிலர் இப்போது தான் உடல்நிலை சரியில்லாமல் நிறைய நபர்கள் இருக்கிறார்களே அவர்களிடம் கருஞ்சீரகத்தை கொடுத்து சரிசெய்ய வேண்டியது தானே என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள் அப்படியே கருஞ்சீரகத்தை சாப்பிட வேண்டும் என்றும தவறாக விளங்கி வைத்துள்ளார்கள் ஆனால் சஹாபாக்கள் இந்த ஹதீஸை எவ்வாறு விளங்கினார்கள் என்பதை பார்க்க வேண்டுமா இல்லையா..? அவ்வாறு அதையெல்லாம் பார்க்காமல் நாமாக சுயஅறிவை வைத்து மறுப்பது என்பது தவறாகும் 

5687. காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார் 
எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். 
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில், ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்' எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்' என்று பதிலளித்தார்கள். 
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்


கருஞ்சீரகத்தில் மருந்து இருக்கிறது அதை நாம் தான் எடுக்க வேண்டும் என்பதை மேலே உள்ள ஹதீஸில் தெளிவாக நாம் பார்க்க முடிகிறது அதன் அடிப்படையில் அதில் மருத்துவம் இருக்கிறது அதை நாம் தான் ஆராய்ச்சி செய்து எடுக்க வேண்டும் ஒரு விடயம் சொல்லி விட்டால் அது நபியுடைய காலக்கட்டத்திலேயே நிரூபித்து காட்டி இருக்க வேண்டும் என்று சொன்னால் பல விஷயங்களை நாம் மறுக்க வேண்டி வரும் என்பதை நினைவில் வைக்க வேண்டும் 

அதே போல முக்கியமான ஒரு கேள்வி அதில் மருந்து இருக்கிறதே அதை நிரூபித்து காட்டுங்கள் அப்போது தான் நம்புவோம் என்று சொன்னால் இந்த கேள்வி நபி அவர்களுடைய செயலை அவமதிப்பது போன்றாகும் 

அல்லாஹ் குர்ஆனில் தேனில் மருந்து இருப்பதாக சொல்கிறான் ஆனால் எந்த நோய்க்கு என்று சொல்லவில்லை இப்போது அதை நபி அமல்படுத்திய ஒரு ஹதீஸை பார்ப்போம் 

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து ‘தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது” என்று கூறி)டவே, மீண்டும் நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி (ஸல்) அவர்கள் அப்போதும், ‘அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), ‘(தாங்கள் சொன்னதையே) நான் செய்தேன். (ஆனால், குணமாகவில்லை)” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது: அவருக்குத் தேன் ஊட்டுங்கள்” என்று கூறினார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.

புஹாரி : 5684 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

இங்கே நபி அவர்கள் தேனை மருந்தாக பயன்படுத்த சொல்கிறார்கள் அது பயன்தரவில்லை அவ்வாறு நான்கு முறை முயற்ச்சி செய்கிறார்கள் அப்போதும் பயன்தரவில்லை என்றதும் விட்டு விட்டார்களா...? 
அல்லாஹ் சொல்லி விட்டான் என்று அல்லாஹ் உன்மையையே சொல்லி விட்டான் உன் சகோதரனின் வயிரு தான் பொய் சொல்லுகிறது என்று சொல்லி பிறகு மீண்டும் தேணை கொடுத்தார்கள் சரியாகி விட்டது 

இப்போ நடைமுறை படுத்தினால் தான் நம்புவோம் என்று சொன்னால் அந்த நான்கு முறை நபி பயன்படுத்தி விட்டு தேனில் நிவரணம் இல்லை என்று சொன்னார்களா...? நிரூபித்தால் தான் நம்புவோம் என்றால் இங்கே நபி உடைய செயலை அவமதிப்பதாக ஆகாதா..? இதையும் சிந்திக்க வேண்டும் 

அடுத்தாக கருஞ்சீரகத்தில் தான் நிவாரணம் இருக்கிறதே அப்போது நபிவுடைய காலக்கட்டத்தில் பிலேக் நோய் வந்ததே அப்போது நபி ஏன் இதை பயன்படுத்தவில்லை...? கருஞ்சீரகத்தில் மருந்து இருப்பதாக சொன்ன நபி அவர்கள் அதை நடைமுறைபடுத்தவில்லையா...? என்ற ஒரு கேள்வியையும் முன்வைக்கிறார்கள்...? 

இதுவும் அவர்களின் அறியாமையை தான் காட்டுகிறது பிலேக் நோய் குறித்து வரும் செய்தியை கூட சரியாக படிக்காமல் அதன் கருத்தை உள்வாங்காமல் கேள்வியை முன்வைக்கிறார்கள் 

பிலேக் நோய் குறித்து நபி அவர்கள் சொல்லும் போது 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பிலேக் நோய் என்பது அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தண்டனையாக அனுப்புகின்றான், அதை மூஃமீன்களுக்கு ரஹ்மத்தாகவும் ஆக்கிவிடுகின்றான். எனவே ஒரு அடியானுக்கு பிலேக் நோய் ஏற்பட்டு, அவன் அல்லாஹ் நாடியதுதான் நடக்கும் என்று நினைத்தவனாக, தனது ஊரில் பொறுமையாக இருந்தால் அவனுக்கு ஷஹீதுடைய கூலி கிடைக்கும்.’  (புஹாரி, அஹ்மத்)


அந்த நோயை அல்லாஹ் தண்டனையாகவும் மூஃமீன்களுக்கு ரஹ்மத்தாகவும் ஆக்கிவிட்டான் இவ்வாறு இருக்கும் போது அதை சரிசெய்து இருக்க வேண்டுமே என்ற கேள்வி ஏற்புடையதா என்பதை நீங்களே சிந்தனை செய்து பாருங்கள் 

அல்லாஹ் தண்டனை கொடுத்து விட்டால் அதில் இருந்து நாமாக தப்பித்துவிட முடியுமா..? 

அடுத்ததாக வேறு விதமாகவும் இதை விளங்கிவிட முடியும் கருஞ்சீரகம் என்பது சுலபமாக கிடைத்து விடும் பொருளா...? அதுவும் ஒருவேலை உணவு உன்பதே அறிதான அந்த காலக்கட்டத்தில் இருந்த மக்கள் ஏன் இதை பயன்படுத்தவில்லை என்று கேள்வியும் அறியாமையை தான் காட்டுகிறது 

அவர்களிடம் கருஞ்சீரகம் இருந்திருக்காது அதனால் பயன்படுத்தி இருக்க மாட்டாரகள் என்று இந்த செய்தியை விளங்க முடியாதா..? 

இந்த கேள்வியும் என்ன அடிபட்டு போகிறது 

அடுத்ததாக இப்போது நாம் வாழும் காலக்கட்டத்தில் மருத்துவர்கள் சொல்லும் விடயம் அவர்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்கள் கருஞ்சீரகத்தில் அனைத்து நோய்க்கும் நிவாரணம் இருக்கிறது என்றும் அதை நிரூபித்துக்கொண்டும் இருக்கிறார்கள்

கூகில் யூடிபில் சென்று Benefits of black pepper என்று தேடினாலே அதனுடைய பயன்களை பார்க்க முடியும் 

கிட்டதட்ட 17க்கும் அதிகமான நோய்களுக்கு நிவரணமாக கருஞ்சீரகம் அமைந்துள்ளது என்பதை நடைமுறை படுத்தியே காட்டிவிட்டார்கள் இதுவரை 
நடைமுறைபடுத்தினால் தான் நம்புவோம் என்று கேள்வியும் இங்கேயும் அடிப்பட்டு போகிறது 

கடைசியாக முக்கியமான ஒரு கேள்வி 

4:87 அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?

இந்த குர்ஆன் வசனத்திற்க்கு முறனாக கருஞ்சீரக ஹதீஸ் இருக்கிறது 

நடைமுறைப்படுத்த முடியாத ஒரு செய்தியை அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லுவார்களா என்று கேள்வியை முன்வைக்கிறார்கள் 

மேலே நாம் கொடுத்த அனைத்து விளக்கத்திற்க்கும் இந்த கேள்வியும் அடிப்பட்டு போகும் 

இருப்பினும் மருத்துவத்தை இஸ்லாத்தின் பார்வையில் எப்படி அனுக வேண்டுமோ அப்படி நாம் அனுகினால் நிச்சயமாக இந்த கேள்விக்கு நேரடியாகவே பதில் கிடைத்து விடும் 

4432. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 39. முகமன் (சலாம்)

எந்த நோயாக இருந்தாலும் அதற்குரிய சரியான நிவாரணம் கொடுக்கப்பட்டால் அல்லாஹ்வின் அனுமதியோடு அது சரியாகி விடும் 

அவ்வாறு சரியாகவில்லை என்றால் அல்லாஹ் நாடவில்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டும் 

இதே அடிப்படையில் கருஞ்சீர ஹதீஸை அனுகுவோம் 
அதில் எல்லா நோய்களுக்கும் நிவாரணம் இருக்கிறது அதை நாம் தான் எடுக்க வேண்டும் எண்ணயாக எடுத்து பயன்படுத்துவது அல்லது வேறு விதமாக பயன்படுத்துவது போன்றவைகளை நாம் தான் எடுக்க வேண்டும் 

அவ்வாறு மருந்து கொடுத்தும் சரியாகவில்லை என்றால் முயற்ச்சி செய்ய வேண்டும் சரியாகவில்லை என்றால் அல்லாஹ் நாடவில்லை என்று முடிவு செய்துக்கொண்டால் இந்த ஹதீஸை இலகுவாக புரிந்துக்கொள்ள முடியும் 

மறுக்கப்படும் சில ஹதீஸ்களுக்கு எந்தவித முரனும் இல்லாமல் அழகிய விளக்கம் கொடுத்து ஏற்றுக்கொள்ள முடியும் 

ஹதீஸ்களை மறுக்க வேண்டும் என்ற நோக்கத்திலே அனுகாமல் சஹீயான செய்தியாக இருக்கிறதே எப்படியாவது விளங்க முடியுமா என்ற நோக்கத்தில் அனுகுங்கள் நிச்சயமாக அழகாக விளங்கும்.

அடுத்தடுத்த தொடர்களில் மற்ற ஹதீஸ்களை பார்க்கலாம் 

-ஆஷிம் ஆஸ் சித்து 


           மீண்டும் வருவேன்