Saturday, 31 December 2016

வரம்பு மீறிய மவ்லீத் வரிகள்

 குர் ஆண் வசனத்தோடு மோதும் மவ்லீத் வரிகள் 





மக்களே! நடுநிலையாக இருக்கும் சகோதர சகோதரிகளே!

இன்று மவ்லீத் ஓதுகிறோம் நபியை பின் பற்றுக்கிறோம் எனக்கூறி மக்களை ஏமாற்றி காசு சம்பாதிக்கதான் பார்க்கிறார்கள்

சுப்ஹான மவ்லீதில் வரும் பாடல்

யா நபி ஸலாம் அலைக்கும்,
யா ரசூல் அலைக்கும் என்று தொடங்கும் இந்த பாடலை நான் கீழே அந்த பாடல் முலுவதையும் நான் Scren shart ல் பதிந்து உள்ளேன்

அந்த பாடலில் வரும் வரியில்

عَالِمُ سِرٍّ وَأَخْفى   مُتْسَجِيْبُ الدَّعَوَاتِ
அகமிய ரகசியம் அறிபவரே, ஆழிய மர்மம் அறிபவரே, அகமுணர்ந் திரங்கும் இறைஞ்சல்களை அன்பாய் ஏற்றுக் கொள்பவரே.

மறைவானவற்றை அல்லாஹ் மட்டும்தான் அறிவான் என்று அல்லாஹ் கூறுகிறான்

ஆனால் இவர்கலோ நபி அவர்களுக்கு அறிவும் என்று எழுதிவைத்து பாடுகிறார்கள்

அல்லாஹ் திர்குர்ஆனில் கூறுகிறான்

வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 27:65)

என்கிற இறை வசனத்துடன் நேரடியாக மோதுகிறது!

_________________________________________

இந்த மவ்லீத் முட்டிகளுக்கு இந்த வசனத்தை எடுத்து கான்பித்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

சரி இவர்கள் மத்ஹப் குப்பையில் இருந்து எடுத்துக்காட்டினால் நம்புவார்களா?

இனைவைப்பு என்று

ஹனஃபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் என்ற நூலில்  இருந்து 

நபி (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று ஒருவன் நம்பினால் அவன் காஃபிராகி விடுவான்
(ஹனஃபி மத்ஹப் நூல் : அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 3 பக்கம் : 94)

இதன் கித்தாப் ஆதாரம் கீழே நான் அந்த பக்கத்தை photo தந்து உள்ளேன் பார்த்துக்கொள்ளலாம்

மக்களே! அறிந்து கொள்ளுங்கள் இவர்கள் குர்ஆனை ஏற்றுக்கொள்ள வில்லை

இவர்கள் குர்ஆனை விட மிகவும் மதிக்க கூடிய மத்ஹப் சாக்கடையும் இவர்கள் பின்பற்றவில்லை

இவர்களிடம் இருந்து மிக மிக கவனமாக இருந்து கொள்ளுங்கள்

ஷிர்க்கை பரப்பும் ஷிர்க் வாதிகள்


Wednesday, 28 December 2016

பலவீனமான_ஹதீஸ்

பலவீனமான_ஹதீஸ்




உம்மு ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாள் (ஹஜ்ஜுப் பெருநாள்) அன்று பத்னுல் வாதியிலிருந்து ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்தை நான் பார்த்தேன். பிறகு திரும்பிச் சென்றார்கள். ஹஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் நபியவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். அவருடன்  அவருடைய குழந்தையும் இருந்தது. அந்தக் குழந்தைக்கு யாருடனும் பேசமுடியாத
நோய் இருந்தது. அந்தப் பெண் “அல்லாஹ்வின் தூதரே இவன் என்னுடைய மகன். என்னுடைய குடும்பத்தில் எஞ்சியிருப்பவன். இவனுக்கு (யாருடனும்) பேசமுடியாத நோய் உள்ளது“ என்று கூறினார். நபியவர்கள் “என்னிடத்தில் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தன்னுடைய இரண்டு கைகளையும் கழுவி வாய் கொப்பளித்து பிறகு (அதனை) அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்கள். “இதிலிருந்து அவனுக்கு நீ புகட்டு. இதிலிருந்து அவன் மீது ஊற்று, அவனுக்காக அல்லாஹ்விடம் நிவாரணம் தேடு” என்று கூறினார்கள்.
உம்மு ஜூன்துப் (ரலி) கூறுகிறார் : அந்தப் பெண்ணை (பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில்) நான் சந்தித்தேன். அந்தத் தண்ணீரில் இருந்து எனக்குக் கொஞ்சம் தந்தால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர் “அது இந்த நோயாளிக்கு மட்டும்தான்“ என்று கூறினார். மேலும் (உம்மு ஜூன்துப்) கூறுகிறார் : நான் அந்த வருடத்திற்குள் அப்பெண்ணைச் சந்தித்தேன் அவரிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர் “அவனது நோய் நீங்கி விட்டது. சாதரண மனிதர்களின் சிந்தனைத் திறன் போல் இல்லாமல் மிகச் சிறந்த அறிவினைப் பெற்றிருக்கிறான்“ என்று கூறினாள்.
நூல் : இப்னு மாஜா (3523)

இதே ஹதீஸ் முஸ்னத் ஹுமைதி என்ற நூலில் 1565 ஹதீஸில் இந்த ஹதீஸ் லஃயீப் என்று உள்ளது

காரனம் இந்த ஹதீஸில்

யஸீத் பின் அபீ ஸியாத் என்ற அறிவிப்பாளர் பலவீனமான வர்

இமாம் நஸயீ அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்றும், இமாம் தாரகுத்னி அவர்கள், "ஆதாரப்பூர்வமான கிதாபுகளில் இவருடைய பலவீனமான செய்திகளைப் பதிவு செய்யக்கூடாது; இவர் அதிகமாகத் தவறிழைப்பவர்; இவர் தனக்குச் சொல்லப்பட்டதை அப்படியே கூறுவார்' என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.
நூல்: தஹ்தீப் தஹ்தீப்
(பாகம்: 11, பக்கம்: 288) 

அதே போன்று இந்த ஹதீஸில் இடம் பெரும்

சுலைமான் பின் அம்ர் அல்அஹ்வஸ்  அறிவிப்பாளர்

(மஜ்ஹுல்)

யாரென்றே அறியப்படாதவர் ஆவார்.
இந்தச் செய்தி மிகவும் பலவீனமானது என்பதை மேற்கண்ட காரணங்களிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

Monday, 5 December 2016

குரான் படி வானம் என்றால் என்ன? அதன் எல்லை எது?




குரான் படி வானம் என்றால் என்ன? அதன் எல்லை எது?


இந்த முழு பிரபஞ்சமும் ஒரே ஒரு ஆரம்ப புள்ளியில் இருந்து உருவானது என்பது  பெரு வெடிப்பு கொள்கை. குரான் பெருவெடிப்பு கோட்பாடுக்கு ஒத்துவருகிறதா? இல்லையா? குரானின் 21:30 பின்வருமாறு கூறுகிறது.

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (21:30 )


அது சரி குரான் படி வானம் என்றால் என்ன? அதன் எல்லை எது? என்ன வரையறை? எனவே முதலில் வானத்தை பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்வோம். பிறகு 21:30 வசனத்திற்கு வருவோம். குரான் வானம் என்கிற வார்த்தையை பொதுப்படையான முறையிலும், சில சமயம் "specific " ஆன முறையிலும் பயன்படுத்துகிறது.  இங்கே இந்த பதிவில் கொஞ்சம்  பார்ப்போம்.





வானம் என்றால் என்ன? வரையறை என்னஎல்லை எது? என்பதை கொஞ்சம் விரிவாக பாப்போம்.



பொதுவான பயன்பாடு:
======================
தற்கால அறிவியல் அறிவை மனித குலம் பெறுவதற்கு முன் தலைக்கு மேலே இருப்பது எல்லாமே வானம்தான், அண்ணார்ந்து பார்த்தல் தெரிவது எல்லாம் "வானம்". உதாரணத்திற்கு இந்த இரண்டு வசனங்களை பார்க்கவும்.

வசனம் 1:
--------------
அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்;... (2:22)


=> எங்கே இருந்து மழை பொழிகிறதோ, எங்கே பறவைகள் பறந்து செல்கிறதோ அவை எல்லாம் உள்ளடக்கிய பொதுவான வானம். இதை சாமானியன் புரிந்துகொள்ள கூடியது. ஆழ்ந்து கவனித்தால் (2:22) இல் வானத்தை "விதானமாக" அமைத்து உள்ளோம் என்றும் சேர்த்தும் கூறுகிறான். அதாவது வானத்தை கூரை போன்று, (Top /ceiling) ஆக்கி இருக்கிறோம் என்று அதன் அர்த்தம். அப்படி என்றால் வானம் முடிந்துவிட்டதா? இந்த கீழே உள்ள வசனத்தை பார்க்கவும்

வசனம் 2:
--------------
இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் - நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை. (15:22)

ஆகவே முதல் இரண்டு வசனங்களை ஒன்று சேர்த்து பார்த்தால் காற்றுவெளி அடங்கிய, பறைவகள் பறக்க ஏதுவான, மழை மேகங்களை தாங்கி செல்லும் வானத்தை பற்றி குரான் குறிப்பிடுவதை அறியலாம். இந்த வானத்திற்கு முடிவு உண்டு என்பதையும் இதிலிருந்து பெறுகிறோம்.  


Specific ஆன பயன்பாடு:
=====================
எங்கே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இருக்கிறதோ அவற்றையும் வானம்   என்றே குறிக்கிறது. நம்முடைய தற்கால அறிவியல் படி இதை space  என்று கூறுகிறோம். 

வசனம் 3:
--------------
வானத்தில் கிரகங்களுக்கான பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம். (15:16. )

வசனம் 4:
--------------
 வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன். (25:61.)

மழை மேகம் போன்றவற்றை கூறும் போது அந்த வானத்திற்கு முடிவு/எல்லை/விதானம் இருக்கிறது என்று கூறுவதில் இருந்து பொதுவாக சொல்லப்படும் வானத்தில் காற்று உண்டு - அதாவது வளிமண்டலம் (atmosphere) இருக்கிறது, பிந்தயதுக்கு (அண்டவெளி - space) வளிமண்டலம் இல்லை என்ற விளக்கம் கிடைகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதத்தில் பின்வரும் வசனங்கள் அமைகின்றன.

வசனம் 5:
--------------
மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை. (21:16. )

வசனம் 6:
--------------
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. (20:6. )


இந்த 5,6 இரு வசனங்களும் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ளதை பற்றி பேசுகிறது. அது என்ன? வளிமண்டலத்தை தவிர வேறு என்னஇந்த குரான் வசனங்கள்  மூன்று physical matters பற்றி பேசுகிறது. (1) பூமி (2) வானம் (3) வானம் மற்றும் பூமிக்கு இடைப்பட்டவை.  எனவே வானம் மற்றும் பூமிக்கு இடைப்பட்டவை என்பது  வளிமண்டலம்  ஆகும். குரான் space மற்றும் atmosphere இரண்டையும் பிரித்துதான் பேசுகிறது என்பதை பின்வரும் உதாரணங்களுடன் நிருபிக்க முடியும். குரான் அழகாக பூமியில் இருந்து SPACE எனப்படும்  வானத்தை பிரித்தோம்  என்று கூறுகிறது.


பூமியில் இருந்து வானம் பிரிக்க்கப்பட்டது

ஆதாரம் 1:
=========
உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான். அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான். (79:27-28)

வளிமண்டலத்திற்கு (atmosphere) பிறகு உள்ளது வெறும் space. அதில் யாரும் வசிக்கமுடியாது. எனவே அதை வசனம் 1 வானத்தை (வளிமண்டலம் என்று சொல்லப்படும் வானத்தைத் பாதுகாப்பானதாக ஆக்கி உள்ளோம் என்று கூறுகிறது. (50:38) இல்  நட்சத்திரங்கள் நிரம்பியதுதான் வானம். (79:27)  இல்  வானத்தின் முகட்டை பூமியின் மேல் இருந்து உயர்த்தி நிறுத்தினேன் என்கிறான். அப்படி என்றால் நட்சத்திரங்கள் அடங்கிய வானத்திற்கும் பூமி பந்துக்கும் இடையில் என்ன உள்ளது atmosphere ஐ குறிக்கிறது.


ஆதாரம் 2:
=========
ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும். (41:12)


தற்கால அறிவியல் வளிமண்டலத்திற்கு எல்லை உண்டு என்கிறது. அதை பல அடுக்குகளாக பிரித்து ஒவ்வொரு அடுக்குக்கும் ஒவ்வொரு இயல்புகளை கூறுகிறது.




குர்ஆனில் space vs atmosphere:

அல்லாஹ் குர்ஆனில் space க்கும் atmosphere க்கும் இடையே வேறுபாடு உண்டு என்பதை தெளிவாக கூறுகிறான்.

உதாரணம் 1:

மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.
நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள். (55:7-9)

வானத்திற்கும் தராசுக்கும் என்ன சம்பந்தம்? பூமியில் இருந்து மேலே செல்ல செல்ல ஈர்ப்பு விசை குறையும். எனவே மேலே space -இல் Gravitational Pull மிக மிக குறைவு என்பது நமக்கு இந்த காலத்தில் தெரியும். ஆனால் குரான் இதை முன்பே கூறிவிட்டது. ஆம் நீங்கள் தராசை எடுத்துக் கொண்டு 10 KM  உயரத்தில் நின்று அளவிடுங்கள், பிறகு  மேலும் மேலே space  சென்று எடை போடுங்கள், அது வேறு ஒரு நிறையைதான் காட்டும். ஆகவே இவ்வாறு  இந்த குரான் வசனம் மூலம் இரண்டு வானங்களுக்கு இடையே உள்ள வேற்றுமையை தராசின் உத்தரத்தின் மூலம் அழகாக படம் பிடிக்கிறது.

(இங்கே இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அல்லாஹ் வானத்தை உயர்த்தியதால்தான் தராசு வேலை செய்கிறது என்று கூறி உள்ளான், புவி ஈர்ப்பு என்று நேரடியாக சொல்லவில்லை, அதனால் நாம் புவி ஈர்ப்புவிசையை மறுக்கிறோம் என்று எடுத்துக் கொள்ள கூடாது.

தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். 22:65

வானங்களும் பூமியும் (தத்தம் எல்லையிலிருந்து) விலகிவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பவன் நிச்சயமாக அல்லாஹ்தான். (தம் எல்லையில் இருந்து) அவ்விரண்டும் சாய முற்பட்டபோதிலும் அவை சாயாதபடி தடுக்கக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவனுமில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனும் மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான். 35:41.

மேலே இந்த வசனத்தில் space பூமியின் atmosphere ஐ காலி செய்துவிடாமல் இருக்க அதை தடுத்துக் கொண்டு இருக்கிறான் என்று கூறுவதை கவனியுங்கள், இந்த தடுப்பு செயல் -   space க்கும் பூமிக்கும் இடையே வளிமண்டலத்தை இழுத்து வைத்துக் கொள்ளும் ஒரு விசை - செயல் -ஆற்றல் என எடுத்துக் கொள்ளலாம்.  உடனடியாக எந்த ஒரு தீர்மானத்தையும் சொல்லாமல் இப்போது விட்டுவிடுகிறேன்.. இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இந்த குரான் வசனத்தில் உள்ள அறிவியல் அற்புதங்களை தனி பதிவாக இடுவோம்.)

உதாரணம் 2:
உதாரனத்திற்க்கு பூமியில் வளிமண்டலம் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் மூச்சுவிட காற்று இருக்காது, பூமியில் மழை, மரம், உயிரினங்கள் போன்ற எந்த ஒரு  விஷயங்கள்  எதுவுமே  நடந்திருக்காது  என்பது ஒரு புறம் என்றாலும் பகல் இரவாவது  இருக்குமா?
என்றால் அது கூட இருக்காது. ஆகவே பூமியை படைத்த அல்லாஹ் அதில் வாழ்வாதரங்களை ஏற்படுத்த செய்த வேண்டிய முக்கியமான நிகழ்வு, அதாவது பூமியில் இருந்து வானத்தை (space) பிரிக்க வேண்டும் - இரண்டிற்கும் நடுவே வளிமண்டல வானத்தை ஏற்படுத்துவதே ஆகும்.


உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான். அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான். (79:27-28)

 நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்;... ( 50:38.)


பகலை படைக்க முடியுமா? இரவை படைக்க முடியுமா?

பூமியில் இருந்து space - ஐ பிரிக்காவிடால் பகல் இரவு எப்படி இல்லாமல் போகும் என்கிற கேள்வியும் நியாயமாகத்தான் படுகிறது. நிலாவை பாருங்கள் அதனுள் வளிமண்டலம் மிக மிக பலவீனமானது. எப்போதுமே இருள்தான். பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே உள்ள space (அதாவது above harizon ) கூட இருள்தான். பூமிக்குள் கற்று இருப்பதால்தான் below Harizon இல் வெளிச்சம் இருக்கிறது. இரவு பகலை உண்டாக்க, பூமியில் உயிரினங்களை, மழையை உண்டாக்க வானத்தை (space ) பூமியில் இருந்து பிரித்தேன் என்கிறான்.

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (21:30)

உங்களைப் படைப்பது அதிகச் சிரமமான வேலையா? அல்லது வானத்தைப் படைப்பதாஅல்லாஹ் அதனை நிர்மாணித்தான். அதன் முகட்டை நன்கு உயர்த்தினான். பிறகு அதைச் சமப்படுத்தினான். மேலும், அதன் இரவை மூடி, அதன் பகலை வெளிப்படுத்தினான். (79:27-29)
 இருள் என்பது ஒளி இல்லாமை, இரவு என்பது பகலுக்கு பிந்தைய நிலை. என்பதை மனதில் வைத்துக் கொண்டு கட்டுரையை தொடரவும். முதலில் வெளிச்சம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

வெளிச்சம் என்றால் என்ன?
------------------------------------------------
வளிமண்டலத்தில் உள்ள வாயு மூலக்கூறுகள், நீர் துகள்கள் மற்றும் மாசு துகள்கள் ஒளியை சிதறடித்து விடுகிறது. சூரியனின் மின்காந்த அலைகள் அணுக்களில் படும் போது அவற்றின் எலக்ட்ரான்கள் அதை உள்வாங்கி higher energy level க்கு செல்கிறது, பிறகு தன்னுடைய பழைய நிலையான ground state -க்கு வரும் போது பெற்ற ஆற்றலை ஒளியாக வெளியிடுகிறது.

ஆகாயம்  நீல நிறம் ஏன் ?
----------------------------------------
ஒளி நமது வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படும் பொது எல்லா அலைநீளங்களும் அதனுடைய நிறங்களும் வெளிபடுகிறது. ஒளிகற்றை நேரடியாக வளிமண்டலத்தில் படும் போது குறைந்த அலை நீலம் உள்ள நீலம் மற்றவைகளை விட அதிகமாக சிதறடிக்கவும் படுகிறது. நமது கண்கள் மற்ற நிறங்களை விட நீல நிறத்தை எளிதாக உணர்வதால் நமக்கு வானம் நீல நிறமாக தெரிகிறது. எப்போது ஒளி  அதிக தூரம்  பயனிகிறதோ அப்போது அதிக அலை நீளம் உடைய சிவப்பு நிறம் நமக்கு தெரிகிறது. அதனால் சூரியன் மறையும் போதும், உதிக்கும் போதும் வானம் செவ்வானமாக காட்சி தருகிறது 

வெளிச்சம் எப்படி உருவாகிறதுவளிமண்டலத்தில் உள்ள துகள்கள்  சூரிய ரேடியேஷனால் பெற்ற எனெர்ஜியை வெளியிடுபோது அது வெளிச்சம் கிடைக்கிறது. அதாவது சூரியனின் மின்காந்த அலைகள் அணுக்களில் படும் போது அவற்றின் எலக்ட்ரான்கள் அதை உள்வாங்கி higher energy level க்கு செல்கிறது, பிறகு தன்னுடைய பழைய நிலையான ground state -க்கு வரும் போது பெற்ற ஆற்றலை ஒளியாக வெளியிடுகிறது.


=> எனவே  பகல், வெளிச்சம் எல்லாம் பூமிக்கு மட்டுமே சாத்தியமே தவிர பூமிக்கும்  சூரியனுக்கும் நடுவே அமைக்கப்பட்ட ஸ்பேஸ் ஸ்டேஷக்கு அல்ல. அதே போலதான் வானம்(ஈதர், பிளாக் மேட்டர் அடங்கிய வானம் பூமியோடு சேர்ந்து இருக்கும் வரை அங்கே வளிமண்டலம் இல்லை,


=> எனவே பகல் அங்கே இல்லை, எப்போதுமே  இருட்டுதான். ஆகவே தான் அல்லாஹ் தெளிவாக கூறுகிறான் வானம் எப்போது உயர்தப்பட்டதோ (மேலும் வானத்திற்கும், பூமிக்கும் இடைப்பட்ட ஒன்று எப்போது படைக்கப்பட்டதோ) அப்போதுதான் இரவை மூடி பகலை வெளிக் கொண்டு வந்தோம். எனவே பகல் படைக்கப் பட்டதே...
இருள் என்றால் என்ன?
-------------------------------------------
எங்கே ஒளி  இல்லையோ அங்கே இருள் என்று பொதுவாக சொல்லலாம். பூமிக்கு மேல அண்ட வெளி முழுவதும் காற்றோ, நீரோ, மாசு துகள்களோ இல்லை.  சூரியன் மற்றும் நட்சத்திரங்களால் அண்டவெளி முழுவதும் மின்காந்த radiation பரவி இருக்கிறது. அண்ட வெளி முழுவதும் உள்ள ஈதரோ பிளக் மேட்டரோ அதை உள்வாங்கி higher energy level க்கு  செல்வது இல்லை. எனவே ஒளி அங்கே உருவாவது இல்ல.  இருள்  மட்டுமே எங்கும் வியாபித்து இருப் பது போல நாம் உணருகிறோம். இது பற்றிய பல ஆய்வுகள் இன்றும் தொடர்கின்றன..

அண்டவெளியில் இருள்:
---------------------------------------
சந்திரனுக்கும்  பூமிக்கு அப்பால் சென்று பார்க்கும் போது நமக்கு எப்போதுமே ஒளிரும் தன்மை உள்ள சூரியன், நட்சத்திரங்கள் போன்றவற்றை பார்க்கலாம். அதே போல ஒளியை பிரதிபலிக்கும் எந்த ஒன்றையும் அதாவது நிலா, விண்கற்கள், ஏனைய கிரகங்கள், பூமி, ஸ்பேஸ் ஸ்டேஷன் ஆகியவற்றை பார்க்கலாம். ஆனாலும் நாம் இருளுக்குள் தான் இருக்கும். நிலவின் பிரதிபலிக்கும் தன்மை < 20%, அதனால் அது பிரகாசிப்பது போல மட்டும் நமக்கு தெரிகிறது.  நிலவில் விண்வெளி வீரர்கள் இருக்கும் பகல் நேரத்திலும் கூட வெளிச்சம் அற்ற நிலையையே உணருவார்கள்.   எனவே வளி மண்டலம்  இருந்தால் மட்டுமே (1) பகல் என்பதெல்லாம் சத்தியம். (2) நீல நிற வானம் சத்தியம். வெளிச்சம் என்பதே அண்டத்தில் உள்ள radiation  ஆனது அணுக்களால்  உள்வாங்கப்பட்டு ஒளியாக வெளியிடப்பட்டால் வெளிச்சம், ஆனால் அதை வெறுமனே உருஞ்சி கொண்டால் இருள். எனவே ஒளியையும்விளக்க அணுக்கள் வேண்டும். வெளிச்சம் இல்லாவிட்டால் இருள் என்று அனைவருக்கும்  தெரியும்.


இருளை படைக்க  முடியுமா?
----------------------------------------------
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான்; இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கினான்; (6:1. )
வானங்களையும், பூமியையும் படைத்ததாக கூறுகிறான். வானம் மற்றும் பூமி என்று எதுவுமே படைக்கப்பட்டாத போது அங்கே என்ன இருந்தது என்று சொல்ல முடியுமா? படைத்தேன் என்று கூறுவதால் படிபதற்கு முன்பு எதுவுமே(space, time) இல்லை.   physics ஐ பொருத்த வரை எப்பொழுது ஒரு பொருளோ, இடமோ கருமை என்று சொல்லப்படும் என்றால் when it absorbs photons, causing it to appear dim compared to other objects. இங்கே எதுவும் படைக்கப்படும் முன்பு இருளும் இல்லை, இருள் இருக்க இடமும்(space) இல்லை.  எனவே இருளை படைத்தான் என்று சொல்வது மிகப் பொருத்தமானது.


முடிவுரை:
=========
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (21:30 )

வானம் பூமி  இணைந்து இருந்தன. பிறகு பிரித்தோம் என்று கூறுவதை கொண்டு, ஆம் என்றே படுகிறது. வெடிப்பிற்கு முன் வானம் பூமி ஆகியவற்றின் சேர்ந்த "entity"   (ஒரே புள்ளியில் இருந்து) இவை உருவாகி  இருக்க வேண்டும் என்பது அதன் கோட்பாடு. அப்படி என்றால் குரான் பெரு வெடிப்பு படியான முழுவதும் ஏற்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். இன்னும் அந்த கோட்பாடானது பல விடயங்களுக்கு பதில் தரவில்லை. எனவே அதை ஒரு தியரி அளவியே வைத்து கொள்ள வேண்டும். அதை வைத்து குரானை எடைபோட முடியாது. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

நபிகள் நாயகம் கூறுகிறார்கள்:(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. பிறகு அவன் நீரை படைத்தது அதில் தனது அர்ஷ்(சிம்மாசனத்தை) அமைத்தான்" (பாகம் 3, அத்தியாயம் 59, எண் 319).

11:7. மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது.

 குரான் (11:7) கூறுகிறது: "அல்லாஹ்  அர்ஷ் என்னும் சிம்மாசனத்தில் இருக்கிறான். அந்த சிம்மாசனம் எங்கே உள்ளது என்றால் மற்றொரு நபி மொழி அர்ஷ் எனும் சிம்மாசனம் ஏழு வானங்களுக்கும் அப்பால் உள்ளது என்று கூறுகிறது. அங்கே யாரும் செல்ல முடியாது என்று இஸ்லாம் கூறுகிறது

எனவே அல்லாஹ்வின் இருப்பிடமோ, அவனின் படைப்பு தன்மை போன்றவற்றை அறிவியல் விதிகளுக்கு உட்படுத்த முடியாது. ஏனெனில் பெருவெடிப்பிற்க்கு முன் எதுவுமே இல்லை. ஆனால்  பிறப்பே இல்லாத அல்லாஹ் காலம் காலமாக இருந்துவருகிறான், அவன் முதலில் நீரை படைத்து அதில் அர்ஷையும் அமைத்தான் என்பது நபி மொழி.

Monday, 28 November 2016

கபூர் கட்டப்படுவதை வெறுத்த ஷாபி இமாம்




கபுர்களை தகர்த்தெறிவோம் 


நாங்கள் மத்ஹப் வாதிகள் 
இமாம்களை மதிக்கிறோம் என்று சொல்லித் திரியும் 
கபூர் வணங்கிகள் அவர்களுடைய மத்ஹபின் இமாமகிய ஷாபி இமாம் அவர்கள் இப்போது இவர்கள் கொள்கைக்கு எதிராக..!


ஏழு வருடம் படித்து விட்டு 
காசுக்காக மார்கத்தை விற்ற ஹஜ்ரத்களை அடையாளம் கண்டுக் கொள்ளுங்கள் 

குர் ஆண் சுன்னாஹ்வை சொல்லித் தராமல் 
மத்ஹப்ளை சொல்லித் தந்து உங்களை வழிகெடுக்கும் மவ்லவிமார்கள் 

அந்த மத்ஹபை கூட இருட்டடிப்பு சித்து மறைத்து பரப்பி வருவதை அடையலாம் கண்டுக் கொள்ளுங்கள் 


கபுர்கள் இடிக்க பட வேண்டும் என்பது நீங்கள் ஏற்றுக் கொண்ட இமாம்களுடைய கருத்தும் கூட 

நடுநிலையாளர்கள் படித்து புரிந்துக் கொள்ளுங்கள் 

இமாம்கள் இவ்வாறு சொன்னார்கள் என்று சொன்னால் கிதாப் ஆதாரம் கேட்க்கும் போலி ஆளிம்சாகளுக்கு கிதாபில் இருந்தே ஆதாரம் 

அல் உம்மு , ஷாபி இமாம் அவர்களே தொகுத்த நூல்  என்பது குறிப்பிட தக்கது 

ஆதாரம் பின்வருமாறு 

وإنما أحب أن يشخص على وجه الأرض شبرا أو نحوه وأحب أن لا يبنى ولا يجصص فإن ذلك يشبه الزينة والخيلاء وليس الموت موضع واحد منهما ولم أر قبور المهاجرين والأنصار مجصصة  قال الشافعي وقد رأيت من الولاة من يهدم بمكة ما يبنى فيها فلم أر الفقهاء يعيبون ذلك (الأم ج: 1 ص: 277)


கப்ருகள் தரைக்கு மேல் ஒரு ஜான் அல்லது அது போன்ற அளவிற்கு உயர்த்தப்படுவதைத் தான் நான் விரும்புகிறேன். அது கட்டப்படாமல் இருப்பதையும் பூசப்படாமல் இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஏனென்றால் இது (கட்டுவதும் பூசுவதும்) அலங்காரத்திற்கும் பெருமைக்கும் ஒப்பாக உள்ளது. மரணம் இதற்கு உரியதல்ல. முஹாஜிரீன்கள் மற்றும் அன்சாரி ஸஹாபாக்களின் கப்ருகள் பூசப்பட்டதாக நான் காணவில்லை. நான் மக்கமா நகரில் சில மன்னர்கள் அங்கு கட்டப்பட்ட கப்ருகளை இடித்ததைப் பார்த்தேன். இதை மார்க்க அறிஞர்கள் யாரும் குறை கூறவில்லை. இவ்வாறு ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள்
(இமாம் ஷாஃபி அவர்கள் தொகுத்த நூல் : அல் உம்மு பாகம் : 1 பக்கம் : 277)

Friday, 25 November 2016

மத்ஹபில் இருந்து இரண்டாம் ஜமாஅத்







மத்ஹப் இமாம்கள்  இரண்டாம் ஜமாஅத் பற்றி 



இரண்டாம் ஜமாஅத் மார்கத்தில் இல்லை 
என்று கூச்சலிட்ட மத்ஹப் வாதிகள் 

அவர்கள்ஏ ற்றுக் கொண்ட இமாம் ஷாபி மற்றும் ஹன்பலி அவர்கள் இரண்டாம் ஜமாஅத் தவறில்லை என்று 
கூறுகிறார்கள் 

ஆதாரங்கள் பின்வருமாறு


முதாலவதாக இமாம் ஷாபி அவர்கள்  

ஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதில் எந்தத் தவறும இல்லை. ஏனென்றால் பள்ளியில் உள்ள அனைத்து மக்களுமே சமமானவர்கள் தான். (பள்ளிவாசல் என்பதே) ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றுவதற்காகத் தான். இதுதான் வீதிகளின் ஓரங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்குரிய சட்டமுமாகும். அங்கு மீண்டும் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதில் எந்தத் தவறும் இல்லை.

ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத்

பாகம்: 1, பக்கம்: 39

இரண்டாவதாக இமாம் ஹன்பலி அவர்கள்


1

مسألة) * (ولا تكره اعادة الجماعة في غير المساجد الثلاثة) معنى اعادة الجماعة انه إذا صلى امام الحي وحضر جماعة أخرى استحب لهم أن يصلوا جماعة وهذا قول ابن مسعود وعطاء والحسن والنخعي واسحق. ( الشرح الكبير لابن قدامة - (ج 2 / ص 7)

மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது என்பதின் கருத்தாகிறது ஒரு பகுதியின் இமாம் தொழுகை நடத்தி முடித்த பிறகு வேறொரு ஜமாஅத்தினர் அங்கு வந்தால் அவர்கள் ஜமாஅத்தாக தொழுவது விரும்பத் தக்கதாகும். இதுதான் இப்னு மஸ்வூத்(ரலி) அதாவு, ஹஸன், மற்றும இப்ராஹிம் நகயீ, இஸ்ஹாக் ஆகியோருடைய கருத்துமாகும்


ஆதாரம் : ஹன்பலி மத்ஹப் நூல் அஷ்ஷரஹல் கபீர் லிஇப்னி குதாமா பாகம் : 2 பக்கம் : 7)


2

وقال مالك والثوري والليث وابو حنيفة والشافعي لا تعاد الجماعة في مسجد له امام راتب في غير ممر الناس ومن فاتته الجماعة صلى منفردا لئلا يفضي إلى اختلاف القلوب والعداوة والتهاون في الصلاة مع الامام، ولانه مسجد له امام راتب فكره فيه اعادة الجماعة كالمسجد الحرام ولنا عموم عليه السلام صلاة الجماعة تفضل على صلاة الفذ بخمس وعشرين درجة وروى أبو سعيد قال جاء رجل - وقد صلى رسول الله صلى الله عليه وسلم - فقال أيكم يتجر على هذا؟ فقام رجل فصلى معه قال الترمذي هذا حديث حسن ورواه الاثرم وفيه فقال ألا رجل يتصدق على هذا فيصلي معه؟ وروى باسناده عن أبي امامة عن النبي صلى الله عليه وسلم مثله وزاد فلما صليا قال وهذان جماعة ولانه قادر على الجماعة فاستحب له كالمسجد الذي في ممر الناس وما قاسوا عليه ممنوع ( الشرح الكبير لابن قدامة - (ج 2 / ص 7)

ஜமாஅத் தொழுகை நடந்த பள்ளியில் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதற்கு நம்முடைய ஆதாரமாகிறது தனியாகத் தொழுவதைவிட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று வரக்கூடிய நபியவர்களின் பொதுவான கட்டளையாகும். மேலும் அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் வந்தார். உங்களில் யாராவது ஒருவர் இவரோடு தொழுது இவருக்கு தர்மம் செய்ய மாட்டாரா? என்று நபியவர்கள் கூறினார்கள் என்ற ஹதீஸம் நமக்குரிய ஆதாரமாகும். இதே ஹதீஸிற்குரிய அறிவிப்பாளர் வரிசையில் அபூ உமாமா (ரலி) அவர்கள் வாயிலாக பின்வரும் அதிகப்படியான கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. அவர்கள் இருவரும் தொழுது முடித்தபோது நபியவர்கள் இந்த இருவரும் ஜமாஅத் ஆகும் என்று கூறினார்கள.

ஆதாரம் : அஷ்ஷரஹல் கபீர் பாகம் : 2 பக்கம் : 7


அல்லாஹ் என்ன சொன்னாலும்
நபி ஸல் எதை சொல்லி இருந்தாலும்

இவை இரண்டையும் விட எங்களுக்கு
இமாம்கள் தான் முக்கியம் என்று
இமாம்களை தூக்கி பிடிக்கும்
இந்த சுன்னத் ஜமாத்தினர்
அவர்கள் மத்ஹபில் அவர்கள் ஏற்றுக் கொண்ட
இமாம்கள் கருத்தை கூட கண்டும் காணமால் இருப்பது வேடிக்கையாக உள்ளது

பள்ளிக்கு தாமதமாக வருவதை தடை செய்யும்
மத்ஹப்வாதிகள் மத்ஹபையே பின்பற்றாதவர்கள் .

இன்னும் சொல்லுவதாக இருந்தால் இவர்கள்
நபிவழிக்கு மட்டும் மாற்றமானவர்கள் இல்லை

அவர்கள் ஏற்றுக் கொண்ட மத்ஹபிர்க்கே மாற்றமானவர்கள்
என்பது தெளிவாகிறது

எனவே மத்ஹப்வாதிகள் மத்ஹபில் நம்பிக்கை
கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் இரண்டாம் ஜமாஅத்
நடத்த தடை செய்ய கூடாது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்

புரிந்துக் கொள்வது மட்டுமில்லாமல்
இதை நடைமுறைபடுத்தவும் வேண்டும்

செய்வார்களா..?

எதை சொன்னாலும் கிதாபில் இருந்து
எடுத்து காட்ட முடியுமா என்று வெத்து சவால் விடும்
வலிகேடர்களுக்கு இதோ கிதாபில் இருந்தே எடுத்து கட்டி உள்ளேன்

நபி ஸல் அவர்கள் காலத்திலே தோன்றியது சுன்னத் ஜமாஅத் என்று சொல்லிக்கொண்டு மத்ஹப் குப்பைகளை தூக்கி பிடிக்கும் சுனத்தை பேணாத சுன்னத் ஜமாதினருக்கு என் சவால்

பிஜேவை முர்தத் என்று சொல்லித் திரியும் தக்லீத் வாதீகளுக்கு என்னுடைய சவால்

உங்கள் கூற்றுக்கு எதிராக உள்ள உங்கள் இமாம்களை முர்தத் என்று சொல்ல தயாரா ..?


தொடரும்